Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா வைரஸ் தொற்றால் சாதாரண அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைகளில் பொதுவார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் நாள் ஒன்றுக்கு ரூ .5000 ஆயிரம் முதல் ரூ. 7500 கட்டணமும், ஐ.சி.யூ. வில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்குநாள் ஒன்றுக்கு ரூ. 15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம்.
கிராமப்புற மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ரூ. 5000-ம் வசூலிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை தவிர கூடுதலாக கட்டணங்கள் எதுவும் வசூலிக்க கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.